ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
அல்லு அர்ஜூன் கார் டிரைவராக பணியாற்றும் மகிபால் என்பவர் மீது ரமேஷ் கிருஷ்ணா என்பவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். சில தினங்களுக்கு முன் அல்லு அர்ஜூன் தனது குடும்பத்துடன் ஐதராபத்தில் பஞ்சாரா ஹில்ஸ் ஒன்னாம் நம்பர் சாலியில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் ஹோட்டலுக்குள் சென்றபின், பார்க்கிங்கில் காரை நிறுத்த மகிபால் சென்றாராம். அப்போது பார்க்கிங் பகுதியில் இருந்து தனது காரை வெளியே எடுக்க முயன்ற ரமேஷ்கிருஷ்ணன் என்பவரது கார் அல்லு அர்ஜுனின் விலையுயர்ந்த கார் மீது சற்றே உராய்ந்து சேதப்படுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது..
இதனால் கோபமான மகிபால், ரமேஷ் கிருஷ்ணாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, செலவு தொகையாக ஆரம்பத்தில் 20 ஆயிரம் கேட்டாராம். பின்னர் போகப்போக 2 லட்ச ரூபாய் தர வேண்டும் என தொகையை உயர்த்தி மிரட்டவும் செய்தாராம். பின்னர் தன்னிடமிருந்து காரை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டார் என சம்பந்தப்பட்ட நபர், ட்ரைவர் மகிபால் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளாராம். போலீஸார் என்ன நடந்ததென விசாரித்து வருகின்றனராம்.