அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு |
கடந்த ஏப்-28ல் வெளியான 'பாகுபலி-2'வுக்கு ரசிகர்களிடம் கிடைத்த அற்புதமான வரவேற்பால் தனது சொந்த ஊரில் மட்டுமல்லாமல் பக்கத்துக்கு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கூட புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது. அந்தவகையில் கேரளாவில் மோகன்லாலின் 'த்ரிஷ்யம்' பட வசூல் சாதனையை ஓவர்டேக் செய்துள்ளது 'பாகுபலி-2'.. மலையாள திரையுலகில் இதுநாள்வரை வெளியான படங்களில் கேரளாவில் அதிகப்படியான வசூலை ஈட்டிய முதல் மூன்று படங்களுமே மோகன்லாலின் படங்களாகத்தான் இருக்கின்றன..
த்ரிஷ்யம் பட வசூல் சாதனையை (சுமார் 44 கோடி ) அடுத்து மோகன்லாலின் 'புலி முருகன் (சுமார் 9௦ கோடி) தான் முறியடித்தது. தற்போது 'பாகுபலி-2'வும் இந்த இரண்டு வார காலத்திற்குள்ளாகவே 'த்ரிஷ்யம்' சாதனையை மட்டுமல்லாமல் மோகன்லாலின் இன்னொரு படமான 'ஒப்பம்' பட வசூல் சாதனையையும் சேர்த்து (43 கோடி) ஓவர்டேக் செய்துள்ளது. இனிவரும் வார இறுதிக்குள் கேரளாவின் 'பாகுபலி-2' மொத்த வசூல் நிலவரம் சுமார் 5௦ கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.