அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு |
திரையுலகில் சாதித்து புகழோடு இருக்கும் ஜாம்பவான்களை விமர்சித்து தன்னை பரபரப்பாக வைத்துக்கொள்பவர் சர்ச்சை மன்னன் ராம்கோபால் வர்மா. இப்போது அவருக்கு சவால் விடும் விதமாக உருவாகியுள்ளார் பாலிவுட் நடிகரான கமால் ரஷீத் கான்.. தன்னைப்பற்றிய செய்திகள் தினசரி மீடியாவில் எந்த விதத்திலாவது வர வேண்டும் என்பதற்காக முன்னணி நட்சத்திரங்களை தரக்குறைவாக விமர்சித்து வருகிறார் இந்த கமால் ரஷீத் கான்..
கடந்த வாரம் மோகன்லாலை, அவர் மகாபாரதம் படத்தில் நடிப்பது குறித்து கிண்டலடித்த இந்த கான் நடிகர், அவரை சோட்டா பீம், ஜோக்கர் என விமர்சித்தார்.. பின் மோகன்லாலிடம் மன்னிப்பும் கேட்டார்.. அடுத்து நேற்று முன் தினம் பாகுபலி-2'வை கார்ட்டூன் படம் போல உள்ளது என கூறி நெருப்பு வார்த்தைகளை வீசினார்.. அந்த அனல் அடங்குவதற்குள் தற்போது மலையாள மெகாஸ்டார் மம்முட்டியை 'சி' கிளாஸ் நடிகர் என கிண்டலடித்துள்ளார்.
அதுவும் எந்தவிதமாக தெரியுமா..? மோகன்லாலை இவர் கிண்டலடித்தாரே... அதுபற்றி விளக்கம் அளிப்பதாக நினைத்துக்கொண்டு டிவிட்டரில், “நான் மம்முட்டியிடம் காசு வாங்கி இருப்பேனோ என சந்தேகம் வேண்டாம் மோகன்லால் சார்.. நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் விசாரித்து கொள்ளுங்கள்.. அந்த மாதிரி ஒரு சி கிளாஸ் நடிகர் யாரென்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை” என கூறியுள்ளார் இந்த கான். இவர் சுயநினைவோடுதான் இப்படி உளறுகிறாரா..? இல்லை மறை ஏதும் கழண்டு விட்டதா..? இப்படியே தொடர்ந்தால், இவரது இந்த செயல் இவருக்கு என்னவிதமான பரிசை கொண்டுவந்த தரப்போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள் சோஷியல் மீடியாவாசிகள்.