போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
மலையாள சினிமாவில் எப்போதெல்லாம் நல்ல படைப்புகள் வெளியாகின்றதோ அப்போதெல்லாம் பாலிவுட்டில் இருந்து அவற்றை முதல் ஆளாக பாராட்டும் நபர் யாரென்றால் அது அது அனுராக் காஷ்யப்பாகத்தான் இருக்கும்.. பாலிவுட் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப் எப்போதுமே தென்னிந்திய மொழிப்படங்களின் மீது தனது பார்வையை ஓட்டிக்கொண்டே இருப்பவர்.. அந்தவகையில் நிவின்பாலி, துல்கர் சல்மான், அங்கமாலி டைரீஸ், செக்ஸி துர்கா என மலையாள நல்ல படங்கள், அதில் சிறப்பாக நடித்த நட்சத்திரங்கள் என தன்னை கவர்ந்த யாரையும் பாராட்ட அவர் தயங்கியதே இல்லை.
சமீபத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை சந்தித்த அனுராக் காஷ்யப் அந்த புகைப்படத்தை இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு “இன்றைய தினம் ஒரு லெஜென்ட்டை சந்தித்ததால் சிறப்பானதாக அமைந்தது” என குறிப்பிட்டுள்ளார்.. இந்த சந்திப்பை தொடர்ந்து மோகன்லாலை அனுராக் காஷ்யப் பாலிவுட்டுக்கு இழுக்கிறாரா என்கிற யூகங்கள் கிளம்பியுள்ளன.. அனுராக் காஷ்யப் ஏற்கனவே நிவின்பாலி நடிக்க இருக்கும் 'மூத்தோன்' படத்தின் திரைக்கதை ஆசிரியராக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.