போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் ஆட்களை பார்த்திருக்கிறோம். ஆனால் அட்வான்ஸாக மன்னிப்பு கேட்கும் ஆட்களை பார்த்திருக்கிறீர்களா..? வேறெங்கும் போக வேண்டாம்.. நம்ம வெள்ளாவி பொண்ணு டாப்ஸியே அதற்கு சிறந்த உதாரணம். நாம் சொல்ல வரும் விஷயம் டாப்ஸி நடித்துள்ள 'நாம் ஷபானா' படத்தை பற்றியது, பாலிவுட்டில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் உளவுத்துறை சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார் டாப்ஸி. இந்தப்படத்தில் மனோஜ் பாஜ்பாயி, டேனி டென்சொங்பா ஆகியோர் நடித்து இருந்தாலும் கூட படத்தின் பிரதான வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் பிருத்விராஜ் தான்.
இவர் இன்டர்நேஷனல் கிரிமினல் டோனி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். டாப்ஸியின் முக்கிய வேலையே பிருத்விராஜை தேடிக்கண்டுபிடித்து, அவர் தரும் டார்ச்சர்களை தாங்கி, அவரது கேரக்டருக்கு ஒரு முடிவை கொண்டு வருவது தான். இதனால் பிருத்விராஜை டாப்ஸி திட்டுவது போலவும், அவருடன் சண்டை போடுவது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கூறியுள்ள டாப்ஸி, “பிருத்விராஜ் ரசிகர்களே.. படம் பார்த்தபின் தயவு செய்து என்னை கொல்வதற்காக தேடாதீர்கள்” என முன்கூட்டியே மன்னிப்பு கேட்கும் விதமாக தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பிருத்விராஜ், “கவலைப்படாதே.. டோனியாலேயே உன்னை கொல்ல முடியவில்லை எனும்போது வேறு யாராலும் முடியாது” என தமாஷாக குறிப்பிட்டுள்ளார்.