ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
நடிகை பாவனாவுக்கு நடந்த கொடுமைக்கு பிறகு அவருக்கு பக்கபலமா இருந்து செயல்பட்டவர் பிருத்விராஜ். இனி நடிக்க மாட்டேன் என்று அறிவித்த பாவனாவை சமாதானப்படுத்தி மீண்டும் நடிக்க அழைத்து வந்திருப்பது பிருத்விராஜ்தான். இந்த நிலையில் இனி பெண்களை இழிவுபடுத்தும் கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
பாவனாவிடமிருந்த மனோதிடமே அவரை இந்த இக்கட்டிலிருந்து விடுவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தீவிரமாக யோசிக்க வேண்டிய நேரம் இது. இனி நான் பெண்களை வக்கிரமாக சித்தரிக்கும் கேரக்டர்களிலோ, படங்களிலோ நடிக்க மாட்டேன். இதற்கு முன்பு அப்படி நடித்தற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்று டுவிட்டரில் அறிவித்துள்ளார். பிருத்விராஜின் இந்த அறிவிப்பு மலையாள நடிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இனி அவர்களும் அடுத்தடுத்து இதுபோன்று அறிவிக்கலாம் என்று தெரிகிறது.