போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஜல்லிகட்டிற்காக போராடி வரும் சூழலில் தமிழ் திரை உலக நடிகர்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் டோலிவுட்டின் யங் சூப்பர் மகேஷ் பாபு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மகேஷ் பாபு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. தமிழர்களின் தைரியம் மற்றும் துணிச்சலின் அடையாளம். தமிழர்கள் தங்கள் பாரம்பரியத்திற்காக ஒன்றிணைந்து போராடி வருவது அதிலும் குறிப்பாக தமிழக மாணவர்களது ஓயாத போராட்டம் பெருமிதம் கொள்ளச்செய்கின்றது. ஜல்லிக்கட்டிற்காக போராடி வரும் தமிழக மக்களுக்கு தானும் துணை நிற்பதாக குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ஆக்ஷன் திரில்லரில் மகேஷ் பாபு தற்போது நடித்து வருகின்றார். தமிழகத்தில் பிறந்து வளர்ந்த மகேஷ் பாபு சென்னையில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.