போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
புலன் விசாரணை,கேப்டன் பிரபாகரன் தந்த ஆர்.கே.செல்வமணி-விஜயகாந்த், தில், தூள் தந்த தரணி-விக்ரம், பொல்லாதவன், ஆடுகளம் தந்த வெற்றிமாறன்-தனுஷ் என இந்த காம்பினேஷன்கலை கவனித்து பாருங்கள்.. முதல் படத்தில் தாங்கள் இயக்கிய ஹீரோக்களை வைத்தே தங்களது அடுத்த படத்தையும் இந்த இயக்குனர்கள் இயக்கினார்கள் என்றால் அது அந்த இயக்குனர்களின் ஒர்க்கிங் ஸ்டைல் மீது நடிகர்கள் வைத்த நம்பிக்கையினால் மட்டுமே.. வெற்றி கூட இரண்டாம் பட்சம் தான். ஆனால் மலையாள நடிகர் பஹத் பாசிலோ தன்னை வைத்து தோல்விப்படம் தந்த அறிமுக இயக்குனரை அழைத்து மீண்டும் ஒரு படம் இயக்க வாய்ப்பு தந்துள்ளாராம்.
கடந்த 2015ல் 'ஆயாள் ஞானல்ல' என்கிற படத்தில் வினீத்குமார் என்பவரது டைரக்சனில் நடித்தார் பஹத் பாசில். இதில் ஸ்பெஷல் என்னவென்றால் பஹத் பாசில் இந்தப்படத்தில் முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். ஷூட்டிங்ஸ்பாட்டில் வினீத்குமாரின் மேக்கிங்கை பார்த்ததும் இந்தப்படம் ஹிட்டாகிறதோ இல்லையோ, மேக்கிங்கிற்காகவே பேசப்படும் என்பதை பஹத் பாசில் நன்கு புரிந்துகொண்டார்.
அதனால் தான் இந்தப்படம் நடந்துகொண்டிருக்கும்போதே வினீத் குமாரிடம், “உங்களது அடுத்த படமும் என்னை ஹீரோவாக வைத்தே பண்ணுவீர்களா” என கோரிக்கையும் வைத்தார். வழக்கமாக சில நடிகர்கள் ஆர்வ மிகுதியால் சொல்லும் வார்த்தைதான் என நினைத்திருந்த வினீத்குமார் படம் வெளியாகி தோல்வியை தழுவியதும் பஹத் பாசில் சொன்னதை சுத்தமாக மறந்தே போய்விட்டாராம்.. ஆனால் இப்போது பஹத் பாசில் தான் சொன்னதை ஞாபகம் வைத்து, மறக்காமல் தன்னை அழைத்து படம் இயக்க சொல்லியது கண்டு 'கடவுள் இருக்காண்டா குமாரு' என்கிற விதமாக இன்னும் பிரமிப்பு விலகாமல் இருக்கிறாராம் வினீத்குமார்.