மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

கடந்த மார்ச் மாதம் 'ட்ராபிக்' பட புகழ் மலையாள இயக்குனர் ராஜேஷ் பிள்ளையின் திடீர் மரணம் மலையாள திரையுலகில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.. அவரது மரணத்திற்கு முதல் நாள் தான் அவர் இயக்கிய 'வேட்ட' படம் ரிலீஸானது. அவர் இந்தியில் இயக்கிய 'ட்ராபிக்' ஏப்ரலில் ரிலீஸானது... ஆக தனது வேலைகளை முடித்துக்கொடுத்துவிட்ட திருப்தியில் தான் அவர் கண்களை மூடியுள்ளார். இருந்தாலும் ராஜேஷ் பிள்ளையின் படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்த குஞ்சாக்கோ போபனை வைத்து ஒரு படம் சொந்தமாக தயாரிக்க வேண்டும் என நினைத்திருந்தாராம் ராஜேஷ் பிள்ளை.
அதனால் அவரது ஆசையை நிறைவேற்றவும் அவரது குடும்பத்திற்கு உதவி செய்யவும் குஞ்சாக்கோ போபன் தீர்மானித்தார். ராஜேஷ் பிள்ளையின் படங்களில் எடிட்டராகவும், அவர் இயக்கிய 'மிலி' படத்தின் கதாசிரியராகவும் பணியாற்றிய மகேஷ் நாராயணன் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்தில் ராஜேஷ் பிள்ளையின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் ஒரு பங்குதாரராக சேர்த்துக்கொள்ள வைத்தார் குஞ்சாக்கோ போபன். பார்வதி கதாநாயகியாகவும், பஹத் பாசில் இன்னொரு நாயகனாகவும் நடித்துள்ள இந்தப்படம் இப்போது 'டேக் ஆப்' என்கிற பெயரில் தயாராகி வருகிறது.