ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
கடந்த மார்ச் மாதம் 'ட்ராபிக்' பட புகழ் மலையாள இயக்குனர் ராஜேஷ் பிள்ளையின் திடீர் மரணம் மலையாள திரையுலகில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.. அவரது மரணத்திற்கு முதல் நாள் தான் அவர் இயக்கிய 'வேட்ட' படம் ரிலீஸானது. அவர் இந்தியில் இயக்கிய 'ட்ராபிக்' ஏப்ரலில் ரிலீஸானது... ஆக தனது வேலைகளை முடித்துக்கொடுத்துவிட்ட திருப்தியில் தான் அவர் கண்களை மூடியுள்ளார். இருந்தாலும் ராஜேஷ் பிள்ளையின் படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்த குஞ்சாக்கோ போபனை வைத்து ஒரு படம் சொந்தமாக தயாரிக்க வேண்டும் என நினைத்திருந்தாராம் ராஜேஷ் பிள்ளை.
அதனால் அவரது ஆசையை நிறைவேற்றவும் அவரது குடும்பத்திற்கு உதவி செய்யவும் குஞ்சாக்கோ போபன் தீர்மானித்தார். ராஜேஷ் பிள்ளையின் படங்களில் எடிட்டராகவும், அவர் இயக்கிய 'மிலி' படத்தின் கதாசிரியராகவும் பணியாற்றிய மகேஷ் நாராயணன் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்தில் ராஜேஷ் பிள்ளையின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் ஒரு பங்குதாரராக சேர்த்துக்கொள்ள வைத்தார் குஞ்சாக்கோ போபன். பார்வதி கதாநாயகியாகவும், பஹத் பாசில் இன்னொரு நாயகனாகவும் நடித்துள்ள இந்தப்படம் இப்போது 'டேக் ஆப்' என்கிற பெயரில் தயாராகி வருகிறது.