ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
கேரளாவில் பிறந்து வளர்ந்தாலும் கூட, கேரளா மாநிலத்தின் மிகச்சிறந்த நடனங்களில் ஒன்றான 'புலிகளி'யை நேரில் பார்த்தது இல்லை என துல்கர் சல்மானுக்கு நீண்ட நாட்களாக ஒரு வருத்தம் இருந்தது. அது என்ன புலிகளி..? கேரள மாநிலத்தின் கலாசார தலைநகரம் என்று அழைக்கப்படும் திருச்சூரில், ஓணம் கொண்டாடத்தின் இறுதி நிகழ்ச்சியாக நடைபெறும் புலிகளி (புலியாட்டம்) என்கிற கிராமிய நடனம். மிகவும் பிரபலமானது. உடல் முழுவதும் வண்ணங்களை பூசி, தொப்பையில் வித விதமான புலி உருவங்களை வரைந்து, செண்டை மேளத்திற்கு ஏற்றதுபோல் உடலை லேசாக அசைத்து ஆடுவதே புலிகளி.
இந்த புலிகளி'யை சமீபத்தில் நேரில் பார்க்கும் வாய்ப்பு துல்கர் சல்மானுக்கு கிட்டியது. சத்யன் அந்திகாடு டைரக்சனில் தற்போது நடித்துவரும் 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படப்பில் இருந்தவருக்கு புலிகளியை காண அழைப்பு வந்தது.. சந்தோஷத்துடன் அங்கே சென்ற துல்கர் 'புலிகளி'யை நேரில் ரசித்ததுடன் உற்சாக மிகுதியால் தானும் அவர்களுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்துவிட்டார். இதனால் 'புலிகளி' ஆட்டக்காரர்கள் ரொம்பவே மகிழ்ச்சியடைந்தார்களாம்.