இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர் ஸ்ரீஜித் ரவி. இவர் நடிக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பு கேரள மாநிலம் ஒட்டப்பாலத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க பள்ளி மாணவிகள் சிலர் சென்றுள்ளனர். அவர்கள் ஸ்ரீஜித் ரவியை சந்தித்து ஆட்டோகிராப் கேட்டுள்ளனர்.
அப்போது ஸ்ரீஜித் ரவி அவர்களிடம் ஆபாசமாக பேசியதுடன், ஆபாச போஸ்சும் கொடுத்ததாகவும், மாணவிகளை தனித்தனியாக செல்போனில் படம் எடுத்ததுடன் அவர்களை வலுக்கட்டாயமாக கட்டிபிடித்தபடி செல்பியும் எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாணவிகள், தங்களுடைய பள்ளி முதல்வரிடம் விஷயத்தை கூறி அழுதுள்ளனர். இதைத் தொடர்ந்து பள்ளி முதல்வர், ஸ்ரீஜித் ரவி மீது போலிசில் புகார் அளித்தார். போலீசார் ஸ்ரீஜித்தை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனாலும் ஸ்ரீஜித் ரவி தன்மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.