போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, அரசியல் பிரவேசம் காரணமாக சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இப்போது எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் விஜய்யின் கத்தி ரீ-மேக்கில் நடித்து வருகிறார். இது சிரஞ்சீவியின் 150வது படம் என்பதால் பிரமாண்டமாய் உருவாகி வருகிறது. சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரண் தேஜா தயாரிக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. ஆனால் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஹீரோயின் தான் இன்னும் முடிவாகவில்லை. இப்படத்தில் நடிக்க பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, கத்ரீனா கைப், நர்கீஸ் பக்ரி, பரிணிதி சோப்ரா என பல நடிகைகளிடம் நடிக்க கேட்டுவிட்டனர். ஆனால் இவர்களும் எல்லோரும் கால்ஷீட் இல்லை இல்லை என்று சொல்லியே தட்டி கழித்து வருகின்றனர். இறுதியாக தெலுங்கில் நடிகை அனுஷ்காவிடம் பேசினர், அவரும் கால்ஷீட் பிரச்னையால் நடிக்க மறுத்துவிட்டார். இதனால் சிரஞ்சீவி படத்திற்கு ஹீரோயின் தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.