போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
இயக்குனர் மாருதி இயக்கத்தில் வெங்கடேஷ் தற்போது பாபு பங்காராம் எனும் படத்தில் நடித்து வருகின்றார். வெங்கடேஷ் நகைச்சுவை வேடமேற்று நடிக்கும் இப்படத்தில் நாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கின்றார். இறுதிக் கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தை ஜூலை மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் வெங்கடேஷின் 75வது படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அண்மையில் வெங்கடேஷைச் சந்தித்து பூரி ஜெகன்நாத் கதை ஒன்றைக் கூறியுள்ளார். கதையின் ஒன்லைன் பிடித்துப் போக திரைக்கதை அமைக்குமாறு பூரி ஜெகன்நாத்திடம் வெங்கடேஷ் கூறியுள்ளாராம். தற்போது ரோக் படத்தை இயக்கி வரும் பூரி ஜெகன்நாத் அப்படத்திற்கு பின்னர் கல்யாண் ராம் நாயகனாக நடிக்கும் படத்தை இயகக்வுள்ளார். அப்படத்தையும் முடித்த பின்னர் வெங்கடேஷின் படத்தை பூரி ஜெகன் நாத் இயக்குவார் என கூறப்படுகின்றது. இப்படம் வெங்கடேஷின் 75வது படமாக இருக்கும் என் தெரிகிறது.