போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாலகிருஷ்ணாவின் 100வது படமான கௌதமிபுத்ர சதர்கனி படத்தின் பூஜை முடிந்தது முதல் படக்குழு ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் பிசியாகியுள்ளனர். விரைவில் மொரோகோவில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தை பெரும் பொருட்செலவில் பஸ்ட் பிரேம் என்டர்டையின்மென்ட் நிறுவனத்தார் தயாரிக்கின்றனர். வரலாற்று திரைப்படமான இப்படத்திற்கென ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணியில் இப்படத்தின் கலை அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன் தாராவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. செப்டம்பர் வரை நயன்தாராவின் கால்ஷீட் கிடைக்காததால் வேறு நடிகையை அனுக க்ரிஷ் திட்டமிட்டுள்ளாராம். நயன்தாரா, அனுஷ்காவிற்கு அடுத்து நாயகி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் ஸ்ருதிஹாசன். க்ரிஷ் மற்றும் படக்குழுவினர் நடிகை ஸ்ருதிஹாசனை இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனராம்