போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு டெல்லியில் மனித உருக்கொண்ட ஆறு வெறிபிடித்த அரக்கர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்டாரே நிர்பயா, அந்த சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா என்ன..? கடந்த சில தினங்களுக்குமுன் அதேபோன்ற ஒரு பயங்கரமான பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி மரணத்தை தழுவியுள்ளார் கேரள சட்டக்கல்லூரி மாணவியான ஜிஷா.. இந்த சம்பவம் நடந்து நான்கு நாட்களாக மறைக்கப்பட்டு, அதன்பின் சோஷியல் மீடியாவில் பரவியதால் இப்போது மாநிலம் முழுவதும் ஜிஷாவுக்கான நீதி கேட்டு மாணவர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.. முதல்வர் உம்மன் சாண்டியும் இந்த வழக்கை தீவிரப்படுத்தி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல மலையாள திரையுலகத்தில் இருந்தும் தொடர்ந்து கண்டன குரல்கள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. குறிப்பாக மலையாள சினிமாவின் மும்மூர்த்திகளாக கருதப்படும் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி மூவருமே தங்களது கண்டங்களை பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மம்முட்டி கூறியுள்ளதாவது, “டெல்லியில் யாரோ ஒரு நிர்பயாவுக்கு இந்த சம்பவம் நடந்தபோது நமது கேரளத்தில் இதுபோன்று ஒருநாளும் நடக்காது என காலரை தூக்கிவிட்டு நடந்தோம்.. இன்று ஒவ்வொரு மலையாளியும் வெட்கி தலைகுனியும் அளவுக்கு ஜிஷாவுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறோம் நாம்” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளதோடு குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார். மோகன்லாலும் சமீபத்தில் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்ற சுரேஷ்கோபியும் கூட இதே கருத்தை வலியுறுத்தி தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். நடிகர் துல்கர் சல்மான், அனன்யா ஆகியோரும் தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்