போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தபிறகு ஏதாவது காரணங்களை சொல்லி சினிமாவை விட்டு விலகும் நடிகைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் தமிழில் வால்மீகி, அய்யனார், சண்டமாருதம் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை மீரா நந்தனோ கிட்டத்தட்ட நான்கு படங்கள் கைவசம் இருந்த நிலையில் சினிமாவை விட்டுவிட்டு கடந்தவருடம் துபாய்க்கு கிளம்பிப்போனதுதான் தான் வியப்பளிக்கிறது. அவர் அங்கே போக காரணம் அங்கே ரேடியோ ஜாக்கியாக வேலை கிடைத்ததுதான். அங்கே போனாலும் கூட நடிப்பின் மீதான அவரது ஆசை குறையவில்லை..
அந்தவகையில் மம்முட்டி நடித்து விரைவில் வெளியாகவுள்ள 'ஒயிட்' படத்தின் முக்கியமான ரோல் ஒன்றில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறி மீரா நந்தனை சம்மதிக்க வைத்துள்ளார் படத்தின் இயக்குனர் உத்ய ஆனந்தன்..இதெல்லாம் இருக்கட்டும் மற்ற நடிகைகள் எல்லாம் வரிசையாக திருமண சாப்பாடு போட்டுக்கொண்டு இருக்கும்போது, மீரா நந்தன் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று கேட்டால் மட்டும் பதறுகிறாராம். காரணம் திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையாகவே வாழ்வதுதான் சுகம் என்கிறார் மீரா நந்தன், அதுமட்டுமல்ல தனிமை தான் என் காதலான என தத்துவார்த்தம் பேசுகிறாராம் மீரா நந்தன். அவருக்கும் ஒரு ராஜகுமாரன் வராமலா போய்விடுவான்..?