அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு |
தமிழில் தொடர் ஹிட் படநாயகியான நயன்தாராவின் கைவசம் தற்போது காஷ்மோரா, இருமுகன் மற்றும் மோகன்ராஜா, தாஸ் ராமசாமி இயக்கும் படங்கள் என அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையே அவர் நடித்து இது நம்ம ஆளு, திருநாள் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயார்நிலையில் உள்ளது. அந்த வகையில், தற்போது தமிழில் அதிகப்படங்களில் நடித்து வரும் நடிகையாக இருக்கிறார் நயன்தாரா.
இந்த நிலையில், தெலுங்கில் அனாமிகா படத்தில் நடித்து முடித்த நேரம், அப்படத்தின் விளம்பரம் சமபந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நயன்தாரா மீது அப்பட டைரக்டரான சேகர் கம்முலா, தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதன்காரணமாக நயன்தாரா ஓராண்டு தெலுங்கு படங்களில் நடிக்க ரெட் கார்டு போட்டனர். அதன் காரணமாகவே 2015ம் ஆண்டு முழுக்க எந்த தெலுங்கு படத்திலும் நயன்தாரா நடிக்கவில்லை.
ஆனால், தற்போது அந்த ஒரு வருடம் முடிந்துவிட்டதால் பாபு பங்காரம் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதையடுத்து கத்தி ரீமேக்கான சிரஞ்சீவியின் 150வது படம், பாலகிருஷ்ணாவின் 100-வது படம் என அடுத்தடுத்து இரண்டு மெகா படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். இதனால் இந்த ஆண்டு நயன்தாராவின் காட்டில் கன மழை கொட்டப்போகிறது என்று தெரிகிறது.