ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் எந்திரன்-2 படத்தை இயக்கும் பணியை ஷங்கர் தொடங்கியதும், எந்திரன் என்ற பெயரை அதாவது எந்திரன் -2 என்று தலைப்பு வைக்க, எந்திரன் படத்தின் முதல் தயாரிப்பு நிறுவனம் தடைவிதித்தது. அதனால் வேறு வழியில்லாமல் 2.0 என்று தலைப்பு வைத்து படத்தை ஆரம்பபித்தனர். இதேபோன்றதொரு சம்பவம் அரண்மனை படத்தின் தெலுங்கு டப்பிங் விஷயத்திலும் நடந்துள்ளது.
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படம் தெலுங்கில் சந்திரகலா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியடைந்தது. அரண்மணை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்ட சுந்தர்.சி தமிழில் அரண்மனை -2 என்று தலைப்பு வைத்ததைப்போல், தெலுரங்கில் சந்திரகலா -2 என்று தலைப்பு வைக்க திட்டமிட்டிருந்தார்.
இதற்கிடையில் அரண்மணை - 2 படத்தின் தெலுங்கு டப்பிங் ரைட்ஸை வேறு ஒருவர் வாங்கிவிட்டார். இதனால் கடுப்பாகிவிட்டார் அரண்மனை முதல் பாகத்தை வாங்கி தெலுங்கில் வெளியிட்டவர். எனவே அரண்மனை - 2 படத்தின் தெலுங்கு டப்பிங்குக்கு சந்திரகலா - 2 என்று பெயர் வைக்க அனுமதி தர மறுத்துவிட்டார். எனவே கலாவதி என்று பெயர் வைத்து படத்தை வெளியிட்டனர்.