போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பெங்கால் டைகர் படத்திற்கு பின்னர் டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா இயக்குனர் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் எவடு ஒக்கடு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இப்படம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், எவடு ஒக்கடு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு நாகார்ஜுனாவை அப்படத்தில் நடிக்க கேட்டுள்ளார். ரவி தேஜாவும் தனது அடுத்த படத்தில் இறங்கி விட்டார். இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பதாகக் கூறி பின்னர் கைவிடப்பட்ட ஆட்டோ ஜானி படத்தில் ரவி தேஜா நடிக்கவுள்ளதாக பூரி ஜெகன்நாத் ஏற்கனவே கூறினார்.
தற்போது இப்படத்தின் திரைக்கதையில் தனகேற்றவாறு சில மாற்றங்களைச் செய்யுமாறு ரவி தேஜா பூரி ஜெகன்நாத்திடம் கூறியுள்ளாராம். ரோச் படத்தில் பிசியாகியுள்ள பூரி ஜெகன்நாத் ஆட்டோ ஜானி படத்தை கையில் எடுத்துள்ளாராம். ஏற்கனவே ஐந்து முறை பூரி ஜெகன்நாத்தின் படங்களில் நடித்துள்ள ரவி தேஜா ஆறாவது முறையாக நடிக்க தயாராகி விட்டார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.