இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
நடிகை அனுஷ்கா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் ருத்ரமாதேவி. இயக்குனர் குணசேகர் தயாரித்து இயக்கிய இப்படம் பல தடைகளைத் தாண்டி திரைக்கு வந்தது. ரூ.80 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.60 கோடி வசூல் செய்தது. இருப்பினும் மனம் தளராத குணசேகர் மீண்டும் சரித்திரப் படம் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
குணசேகர், வீர அபிமன்யு எனும் தலைப்பை பதிவு செய்து வைத்துள்ளார். இதனால் மகாபாரதத்தில் வரும் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் கதையைத் திரைப்படமாக குணசேகர் எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. தெலுங்கு திரை உலகின் மறைந்த பிரபல நடிகர் என்.டி.ராமா ராவ் கிருஷ்ணராக நடிக்க மறைந்த நடிகர் சோபன் பாபு அபிமன்யுவாக நடித்த வீர அபிமன்யு திரைப்படம் இயக்குனர் மதுசூதன ராவ் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது.
தற்போது மீண்டும் அப்படம் புதிய தொழில் நுட்பத்தில் டோலிவுட்டில் உருவாகவுள்ளதாம். இதில் ருத்ரமாதேவி படத்தில் ஆக்ரோஷ முகம் காட்டிய ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் அபிமன்யுவாக நடிக்கலாம் என்று கூறப்படுகின்றது. சரித்திரப் படங்களில் நடிக்க விரும்பாத டோலிவுட்டின் மகேஷ் பாபுவை அபிமன்யுவாக நடிக்க வைக்கலாம் என்று குணசேகர் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.