போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தென்னிந்திய திரை உலகில் சிறந்த நடிகையாக திகழ்ந்த ரேவதி, தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். நடிகை ரேவதி இறுதியாக ஹிந்தியில் மார்கரிட்டா வித் அ ஸ்ட்ரா படத்தில் நடித்ததன் வாயிலாக பாலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். நடிகையாக மட்டுமல்லாது ஹிந்தி, மலையாளப் படங்களை இயக்கி இயக்குனராகவும் அவதாரம் எடுத்த ரேவதி, தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தெலுங்கில் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.
டோலிவுட்டின் பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் தூண்டுதலின் பேரில் ரேவதி இயக்குனராக மாறவுள்ளாராம். இப்படத்தை பூரி ஜெகன்நாதே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இயக்குநர் பூரி ஜெகன்நாத் தற்போது நடிகர் வருண் தேஜ் நடிக்கும் லோபர் படத்தை இயக்கி வருகின்றார்.