தமிழக அரசு விருது பெற்ற சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ் | சினிமாவை போன்று விளம்பரங்களிலும் சம்பாதிக்கும் தமன்னா | நானியின் ‛தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் | சிக்கிரி சிக்கிரி பாடலுக்கு சொந்தமாக நடன அசைவை வெளிப்படுத்திய ராம்சரண் | துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு | மூத்த மகனும் டைரக்ஷனில் இறங்குகிறார் ; பிரித்விராஜின் அம்மா தகவல் | படப்பிடிப்பில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய மிருணாள் தாக்கூர் | 24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர் | பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை இப்போதும் பெறுமா? | திருமண வீடியோ உரிமை : வேண்டாமென்று மறுத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா? |

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் தொடரும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்லால் உடன் இணைந்து ஷோபனா நடித்துள்ளார். ஆபரேஷன் ஜாவா புகழ் தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். கடந்த மாதம் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்காத நிலையில் தொடரும் திரைப்படம் முதல் காட்சியிலிருந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று கொச்சியில் உள்ள பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கில் இந்த படத்தை பார்க்க இயக்குனர் தருண் மூர்த்தி வந்திருந்தார். படம் பார்த்து முடித்துவிட்டு அவர் ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோகன்லால் அவருக்கு வீடியோ காலில் அழைப்பு விடுத்தார்.
அவரிடம் படம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்களை கேள்விப்பட்டதாக கூறி தருண் மூர்த்தியை பாராட்டினார் மோகன்லால். அப்போது தருண் மூர்த்தி, தான் திரையரங்கில் இப்போதுதான் படம் பார்த்துவிட்டு வருவதாகவும் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள் என்றும் கூறியபடி மோகன்லாலுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருப்பதை ரசிகர்களிடம் காட்டினார். ரசிகர்களின் உற்சாகத்தை பார்த்த மோகன்லாலும் அவர்களிடம் சில வார்த்தைகள் உரையாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.