2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணின் மூன்றாவது மனைவி அன்னா லெஸ்னேவா. அவர்களுக்கு பொலெனா அஞ்சனா பவனோவா என்ற மகளும், மார்க் சங்கர் என்ற மகனும் உள்ளனர்.
2013ல் இருவருக்கும் திருமணம் நடந்தது முதல் ஹைதராபாத்தில் தான் வசித்து வந்தனர். கடந்த வருடம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தனது குடும்பத்தினரை சிங்கப்பூர் அனுப்பிவிட்டார் பவன் கல்யாண். அங்குள்ள பள்ளிகளில் அவரது குழந்தைகள் படித்து வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மார்க் சங்கர் படித்த பள்ளியில் நடைபெற்ற தீ விபத்தில் மார்ச் சங்கர் காயமடைந்தார். சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பினார். இதனிடையே, தனது குடும்பத்தாருடன் இன்று ஹைதராபாத் திரும்பினார் பவன் கல்யாண்.
பவன் கல்யாண் தனது குடும்பத்தினரை தன்னுடனேயே வைத்துக் கொள்வாரா அல்லது மகனுக்கு முழுமையாக குணமடைந்த பின் அவர்களை மீண்டும் சிங்கப்பூர் செல்ல வைப்பாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
தனது மகன் குணமடைய வாழ்த்தும், பிரார்த்தனையும் செய்த அனைவருக்கும் பவன் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார்.