பதட்டத்துடன் சிக்கந்தர் படப்பிடிப்பை நடத்திய ஏ.ஆர். முருகதாஸ் | ஆஸ்கர் விருதுக்காக நான்காவது குழந்தை பெற்றுக் கொள்ள தயார் : வீர தீர சூரன் நடிகர் புதிய லட்சியம் | என் சகோதரி நல்லா நடித்திருக்கிறாரா? - பிரித்விராஜிடம் விசாரித்த அமீர்கான் | இளையராஜாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க பரிசீலனை? | ஆன்லைன் முன்பதிவில் சாதனை படைத்த 'எல் 2 எம்புரான்' | அடுத்த மூன்று முக்கிய வெளியீடுகளில் இசை ஜிவி பிரகாஷ்குமார் | ‛வார் 2' படத்தால் ‛கூலி' படத்திற்கு அடித்த ஜாக்பாட் | சூர்யா 45 படத்தில் படமாக்கப்பட்ட பிரமாண்ட பாடல் காட்சி | சச்சின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்தின் தலைப்பு இதுவா? |
கதைக்காக மட்டுமே ஹீரோக்களை தேடிப்போகும் வெகு சில இயக்குனர்களில் ஜீத்து ஜோசப்பும் ஒருவர். மோகன்லாலை வைத்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த அவர் மீண்டும் அவரை வைத்து 'நேர்' என்கிற ஹிட் படத்தை கொடுத்தபின் அவர் அடுத்ததாக மலையாள திரையுலகின் இரண்டாம் நிலை நடிகரான ஆசிப் அலியை வைத்து 'கூமன்' என்கிற படத்தை இயக்கினார். அதையடுத்து வளர்ந்து வரும் இயக்குனரும் நடிகருமான பஷில் ஜோசப்பை வைத்து 'நுனக்குழி' என்கிற படத்தை இயக்கினார். மீண்டும் முன்னணி நடிகர்களுடன் கைகோர்ப்பார் என்று பார்த்தால் அடுத்ததாக மீண்டும் ஆசிப் அலியை வைத்து தற்போது மிராஜ் (மிரட்சி) என்கிற படத்தை இயக்கி வந்தார் ஜித்து ஜோசப்.
இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். சண்டே ஹாலிடே, பி டெக், சமீபத்தில் வெளியான கிஷ்கிந்தா காண்டம் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக ஆசிப் அலியுடன் ஜோடியாக நடித்திருக்கிறார் அபர்ணா பாலமுரளி. ஜன.,20ம் தேதி படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது 48 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் ஜீத்து ஜோசப். அடுத்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 'த்ரிஷ்யம்' படத்தில் மூன்றாம் பாகத்தின் வேலைகளை ஜீத்து ஜோசப் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.