இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மோகன்லால் நடிப்பில் இந்த வருடம் அடுத்தடுத்து படங்கள் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மலையாளத்தில் லூசிபர் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள 'எம்புரான்' மற்றும் 'தொடரும்', தெலுங்கில் 'விருஷபா' மற்றும் 'கண்ணப்பா' ஆகிய படங்களில் நடித்துள்ளார் மோகன்லால். இதில் தெலுங்கு படங்களில் கண்ணப்பா படத்தில் ஏற்கனவே நடித்து முடித்துவிட்ட மோகன்லால் நேற்று தான் விருஷபா படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்தார்.
அதே சமயம் கடந்த ஜனவரி 30ம் தேதியே மலையாளத்தில் அவர் நடித்திருந்த தொடரும் படத்தை வெளியிட ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் திட்டமிட்டபடி அந்த படம் வெளியாகவில்லை. பிப்ரவரியில் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய மாற்று திட்டம் இருந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் மோகன்லால்.
அதற்கு பதிலாக வரும் மார்ச் 27ம் தேதி ஏற்கனவே திட்டமிட்டபடி எம்புரான் படத்தை ரிலீஸ் செய்ய மோகன்லால் முடிவெடுத்து இருக்கிறாராம். காரணம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மோகன்லால் இயக்கி நடித்த 'பரோஸ்' திரைப்படம் அவருக்கு தோல்வி படமாக அமைந்தது. தொடரும் படம் கூட தருண் மூர்த்தி என்கிற என்கிற அவ்வளவு பிரபலமில்லாத இயக்குனர் இயக்கியுள்ள ஒரு பீல் குட் படமாகத்தான் உருவாகியுள்ளது.
அதற்கு எந்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்பது தெரியாததால் அதற்கு பதிலாக ஏற்கனவே வெற்றி கூட்டணியான பிரித்விராஜ் டைரக்ஷனில் தான் நடித்துள்ள மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய எம்புரான் படத்தை இந்த வருடத்தில் தனது முதல் படமாக ரிலீஸ் செய்து வெற்றியை ருசிக்க முடிவு செய்துள்ளாராம் மோகன்லால். அதனாலேயே தொடரும் படத்தின் ரிலீஸை மே மாதம் தள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.