சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
ரேணுகா சுவாமி என்ற ரசிகரை படுகொலை செய்த வழக்கில், முன்னனி கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது காதலி நடிகை பவித்ரா கவுடாவை தொடர்ந்து சமூக வலைதளம் மூலம் டார்ச்சர் செய்து வந்ததால் இந்த கொலை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கும், விசாரணையும் நடந்து வருகிறது. இந்த வழக்கு குறித்து பேட்டி அளித்த போலீஸ் கமிஷனர், பவித்ரா கவுடாவை தர்ஷனின் மனைவி என்று குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி பெங்களூரு மாநகர காவல்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளர். அதில், ''செய்தியாளர் சந்திப்பில் நடிகை பவித்ரா கவுடாவை, தர்ஷனின் மனைவி என குறிப்பிட்டீர்கள். அது தவறானது. தர்ஷனின் சட்டப்பூர்வமான மனைவி நான் மட்டுமே என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நீங்கள் தவறாக குறிப்பிட்டதை தொடர்ந்து, கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வராவும், ஊடகங்களும் பவித்ரா கவுடாவை மனைவி என்றே கூறி வருகின்றனர். பவித்ரா கவுடாவுக்கு சஞ்சய் சிங் என்பவருடன் ஏற்கனவே திருமணமாகி, ஒரு மகள் இருக்கிறார்.
இந்த உண்மை போலீஸாரின் ஆவணங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். பவித்ரா கவுடாவும், தர்ஷனும் கணவன் மனைவி அல்ல. அவர் எனது கணவரின் தோழி மட்டுமே. அதுவும் தொழில் சார்ந்த நட்பு மட்டுமே அவர்களுக்குள் இருந்தது'' என எழுதியுள்ளார்.