நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
மலையாள திரையுலகில் பணியாற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் மற்றும் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக மலையாள திரை உலகில் சில முக்கியமான நடிகைகளால் உருவாக்கப்பட்டது தான் சினிமா பெண்கள் நல அமைப்பு. இதில் சீனியர் நடிகையான ரேவதி முதல் ரம்யா நம்பீசன், பார்வதி, பத்மப்பிரியா உள்ளிட்ட பலர் இணைந்து அவ்வப்போது பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக மீடூ புகாரில் சிக்கும் சினிமா பிரபலங்களுக்கு எதிராக கண்டனங்களை தெரிவிப்பதுடன் சில நேரங்களில் போராட்டங்களையும் மேற்கொண்டனர். மேலும் அப்படி குற்றச்சாட்டுக்கு ஆளாகும் சினிமா கலைஞர்களுடன் படங்களில் இணைந்து பணியாற்றுவதை தவிர்த்தும் வந்தனர்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படத்தில் நடிகை பார்வதி, குணச்சித்திர நடிகர் அலன்சியர் லே லோபஸ் என்பவருக்கு மகளாக நடித்திருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகர் அலன்சியர் லே தன்னுடன் நடித்த ஒரு அறிமுக நடிகையிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக மீடூ புகாரில் இடம் பிடித்தார். இதே பார்வதி உள்ளிட்ட சினிமா பெண்கள் நல அமைப்பு உறுப்பினர்களின் கண்டனத்திற்கும் ஆளானார்.
அதன்பிறகு தனது செயல்களுக்காக தன்னை மன்னித்து விடுமாறு பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் அலன்சியர் லே. அப்படி அவர் மன்னிப்பு கேட்டதற்கும் அவரது மன மாற்றத்திற்கும் பார்வதி உள்ளிட்ட பல நடிகைகளும் அந்த சமயத்தில் தங்களது பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தனர். அதனால்தான் தற்போது அலன்சியர் லேவுடன் இணைந்து நடிக்க பார்வதி ஒப்புக் கொண்டார் என்று தெரிகிறது.