சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

மலையாள நடிகர் சங்கத்திற்கு (அம்மா) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வரும் இரண்டு ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்ய வருகிற 30ம் தேதி தேர்தல் நடக்கிறது.
கடந்த இரண்டு முறை தலைவராக இருந்த மோகன்லால் பணிச்சுமை காரணமாக இந்த முறை அவர் அவர், மீண்டும் போட்டியிட மாட்டார் என்று தகவல்கள் வெளியாயின. இதனால் நடிகர்கள், குக்கு பரமேஸ்வரன், அனூப் சந்திரன், ஜெயன் செர்தாலா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த நடிகர் சங்கக் கூட்டத்தில் மோகன்லால், ஒருமனதாகத் தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனால் அந்தப் பதவிக்குப் போட்டியிட இருந்தவர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.