விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
மலையாளத்தில் மம்முட்டி, பிரித்விராஜ் இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்த போக்கிரி ராஜா என்கிற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் வைசாக். அதைத் தொடர்ந்து மோகன்லாலை வைத்து இவர் இயக்கிய புலி முருகன் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தொடர்ந்து மம்முட்டியை வைத்து மதுர ராஜா, அதன் பிறகு மீண்டும் மோகன்லாலை வைத்து அலோன் ஆகிய படங்களை இவர் இயக்கினாலும் இந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.
இந்த நிலையில் மம்முட்டியை வைத்து மூன்றாவதாக இவர் இயக்கிய டர்போ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 50 கோடி வசூலை தாண்டி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து மீண்டும் மோகன்லால் படத்தை தான் இயக்கப் போவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதியாகவே கூறியுள்ளார் வைசாக். இந்த படத்திற்கான கதை ஏற்கனவே மோகன்லாலிடம் சொல்லப்பட்டு அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமே இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் முடிவு செய்யப்பட்டு விட்டதாம். மோகன்லால் தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பை முடித்ததும் இந்த வருட இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார் வைசாக்.