இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

உலகில் புகழ் பெற்று விளங்கும் பிரபல நட்சத்திரங்களுக்கு வெளிநாடுகளில் உள்ள பிரபல மியூசியங்களில் மெழுகுசிலை வைத்து பெருமைப்படுத்துவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தெலுங்கின் பிரபல முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகுசிலை தற்போது துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான அளவுகள் எல்லாம் கடந்த வருடமே எடுக்கப்பட்ட நிலையில் தற்போது இதன் திறப்பு விழா துபாயில் நடைபெற்றது. இதற்காக சமீபத்தில் தனது குடும்பத்துடன் துபாய் கிளம்பி சென்றார் அல்லு அர்ஜுன்.
மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு, தனது மெழுகுச்சிலையுடன், புகைப்படம் எடுத்துக் கொண்ட அல்லு அர்ஜுன் அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டு உள்ளார். இதில் யார் அல்லு அர்ஜுன், எது மெழுகுசிலை என எளிதில் தெரிந்து கொள்ளாத முடியாதபடி அந்த சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பற்றி அல்லு அர்ஜுன் கூறும்போது, “ஒவ்வொரு நடிகருக்கும் இது ஒரு மைல்கல் தருணம்' என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.




