எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மலையாளத்தில் சின்ன பட்ஜெட் படமாக உருவானாலும் சமீபத்தில் டைட்டில் சர்ச்சையில் பரபரப்பாக பேசப்பட்ட படம் 'ஒரு பாரத சர்க்கார் உல்பனம்'. இந்த படம் மார்ச் 1ம் தேதியே ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் இடம் பெற்றுள்ள பாரத என்கிற பெயரை நீக்கினால் தான் சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படும் என கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரத என்கிற பெயரை நீக்கிவிட்டு 'ஒரு சர்க்கார் உல்பனம்' என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை டி.வி ரஞ்சித் என்பவர் இயக்கியுள்ளார். 96 புகழ் கவுரி கிஷன், மலையாள முன்னணி காமெடி நடிகர் அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு கதாசிரியர் நிசாம் ராவுத்தர் என்பவர் கதை எழுதியுள்ளார். படம் நாளை (மார்ச்-8) வெளியாக இருக்கும் நிலையில் திடீரென நேற்று காலை ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் நிசாம் ராவுத்தர். இவரது வயது 49. இவரது மரணம் படக்குழுவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கு முன் சச்சாரியாயுடே கர்ப்பிணிகள், பாம்பே மிட்டாய் உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் கதை எழுதியுள்ளார்.