தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
மலையாளத்தில் ஒன்பதாம் நூற்றாண்டு வரலாற்று பின்னணியில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது 'கத்தனார்' திரைப்படம். ஜெயசூர்யா கதாநாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் நடிகை அனுஷ்கா முதன்முறையாக மலையாள திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார். மலையாள திரையுலகிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது என்று சொல்லப்படுகிறது. இயக்குனர் ரோஜின் தாமஸ் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தை மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான கோகுலம் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஏழு மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சமீபத்தில் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார் நடிகர் மோகன்லால். படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த அவருக்கு படக்குழுவினர் ஒரு விநாயகர் சிலையை பரிசளித்து வரவேற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் மோகன்லாலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்பது போன்ற தகவல்கள் சோசியல் மீடியாவில் யூகமாக கிளம்பியுள்ளன.