நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மலையாளத்தில் ஒன்பதாம் நூற்றாண்டு வரலாற்று பின்னணியில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது 'கத்தனார்' திரைப்படம். ஜெயசூர்யா கதாநாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் நடிகை அனுஷ்கா முதன்முறையாக மலையாள திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார். மலையாள திரையுலகிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது என்று சொல்லப்படுகிறது. இயக்குனர் ரோஜின் தாமஸ் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தை மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான கோகுலம் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஏழு மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சமீபத்தில் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார் நடிகர் மோகன்லால். படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த அவருக்கு படக்குழுவினர் ஒரு விநாயகர் சிலையை பரிசளித்து வரவேற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் மோகன்லாலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்பது போன்ற தகவல்கள் சோசியல் மீடியாவில் யூகமாக கிளம்பியுள்ளன.