இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
மலையாளத்தில் ஒன்பதாம் நூற்றாண்டு வரலாற்று பின்னணியில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது 'கத்தனார்' திரைப்படம். ஜெயசூர்யா கதாநாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் நடிகை அனுஷ்கா முதன்முறையாக மலையாள திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார். மலையாள திரையுலகிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது என்று சொல்லப்படுகிறது. இயக்குனர் ரோஜின் தாமஸ் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தை மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான கோகுலம் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஏழு மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சமீபத்தில் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார் நடிகர் மோகன்லால். படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த அவருக்கு படக்குழுவினர் ஒரு விநாயகர் சிலையை பரிசளித்து வரவேற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் மோகன்லாலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்பது போன்ற தகவல்கள் சோசியல் மீடியாவில் யூகமாக கிளம்பியுள்ளன.