ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
இயக்குனர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நல்ல படங்களாக தேர்வு செய்து நடித்து வெற்றி பெற்று வருகிறார். அந்த வகையில் தற்போது மலையாளத்தில் அவர் சேஷம் மைக்கில் பாத்திமா என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கட்டுப்பாடுகள் மிகுந்த ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் இருந்து தைரியமாக வெளிவந்து கால்பந்து அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் கமெண்டரி செய்யும் கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். வரும் நவம்பர் மூன்றாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் கொச்சியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஒடிசா எப்.சி கால்பந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கல்யாணி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்திற்காக தான் பயிற்சி பெற்றது, நடித்தது ஆகிய அனுபவங்களை கொண்டு கொஞ்ச நேரம் இந்த போட்டியின் போது தானே லைவ்வாக கமெண்ட்ரி செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அப்படியே அங்கே வருகை தந்திருந்த பார்வையாளர்களிடம் தங்களது படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார் கல்யாணி பிரியதர்ஷன்.