'கொட்டுக்காளி' விருதுக்காக எடுக்கப்பட்ட படமா? - இயக்குனர் விளக்கம் | குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம் | இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம் | அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் |
மலையாள சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் முக்கியமானவர் ஜாய் மேத்யூ. மலையாளத்தில் வெற்றி பெற்ற ஷட்டர் மற்றும் அங்கிள் என, இருக்கையில் அமரவைத்த திரில்லிங் படங்களுக்கு கதை எழுதியவரும் இவர்தான். தமிழில் தேவி, கிணறு என இரண்டு படங்களில் நடித்துள்ள இவர் மலையாள திரை உலகில் பிசியான குணச்சித்திரன் நடிகராக நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது இவரது கார் விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எர்ணாகுளத்தில் இருந்து கோழிக்கோடுக்கு காரில் பயணித்தபோது எதிரில் வந்த ட்ரக்கின் மீது அவரது கார் போதி விபத்துக்குள்ளானது. அருகில் இருந்தவர்கள் ஜாய் மேத்யூவையும் பலத்த காயமடைந்த டிரக்கின் ஓட்டுனரையும் விரைந்து அருகில் இருந்த நகரத்தின் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது ஜாய் மேத்யூவுக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் இவர் விரைவாக குணமாக வேண்டும் என பிரார்த்தனைகளை வெளியிட்டு வருகின்றனர்