என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

மலையாள சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் முக்கியமானவர் ஜாய் மேத்யூ. மலையாளத்தில் வெற்றி பெற்ற ஷட்டர் மற்றும் அங்கிள் என, இருக்கையில் அமரவைத்த திரில்லிங் படங்களுக்கு கதை எழுதியவரும் இவர்தான். தமிழில் தேவி, கிணறு என இரண்டு படங்களில் நடித்துள்ள இவர் மலையாள திரை உலகில் பிசியான குணச்சித்திரன் நடிகராக நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது இவரது கார் விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எர்ணாகுளத்தில் இருந்து கோழிக்கோடுக்கு காரில் பயணித்தபோது எதிரில் வந்த ட்ரக்கின் மீது அவரது கார் போதி விபத்துக்குள்ளானது. அருகில் இருந்தவர்கள் ஜாய் மேத்யூவையும் பலத்த காயமடைந்த டிரக்கின் ஓட்டுனரையும் விரைந்து அருகில் இருந்த நகரத்தின் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது ஜாய் மேத்யூவுக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் இவர் விரைவாக குணமாக வேண்டும் என பிரார்த்தனைகளை வெளியிட்டு வருகின்றனர்
 
           
             
           
             
           
             
           
            