ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் | திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால் | தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம் | காந்தாரா வராஹரூபம் பாடலுக்கு நடனம் ஆடிய பார்வதி ஜெயராம் | சிரஞ்சீவி வீட்டில் நயன்தாரா குடும்பத்தினரின் தீபாவளி கொண்டாட்டம் | எந்த ஒரு கட்டுக்கதையும் என்னை அழித்துவிட முடியாது ; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து அஜ்மல் |
மலையாளத்தில் மின்னல் முரளி என்கிற படத்தில் இயக்குனராகவும் ‛ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' என்கிற படத்தின் நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் இயக்குனர் பஷில் ஜோசப். இவர் முதன்முதலாக இயக்கிய நகைச்சுவை திரைப்படம் குஞ்சி ராமாயணம். இந்த படத்திற்கு கதை எழுதியவர் கதாசிரியர் தீபு பிரதீப். இந்த நிலையில் தீபு பிரதீப் கதையில் தற்போது உருவாகியுள்ள படம் பத்மினி. இந்தப் படத்தில் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்க அபர்ணா பாலமுரளி மற்றும் மடோனா செபாஸ்டியன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்த படத்தை இயக்குனர் சென்னா ஹெக்டே என்பவர் இயக்கியுள்ளார். குஞ்சி ராமாயணம் படம் போல இதுவும் இன்னொரு கதைக்களத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சத்துடன் உருவாகியுள்ளதாம். இந்த படம் வரும் ஜூலை 7ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது கேரளாவில் கனமழை பெய்து வருவதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை படத்தின் நாயகியான அபர்ணா பாலமுரளி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.