மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரின் தீவிர ரசிகர் ஷ்யாம். ஜூனியர் என்டிஆர் பங்கேற்கும் அனைத்து நிகழ்விலும் தவறாமல் கலந்து கொள்வதுடன் அவரது படங்களையும் தவறாமல் பார்த்துவிடும் அளவுக்கு ரசிக மனபான்மை கொண்டவர். ஷியாம் குறித்து பல நேர்காணல்களில் ஜூனியர் என்டிஆர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் சிந்தலுரு கிராமத்தில் வசித்து வந்த ஷ்யாம் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதனை தற்கொலை இல்லை என கூறி அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். ஷ்யாமின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் தனது ரசிகரின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அரசுக்கும், போலீசிற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‛‛ஷ்யாம் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தச் சூழ்நிலையில் அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவில்லை. அவரது மர்ம மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்.