படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
நடிகர் சிவராஜ்குமார் மற்றும் அவரது மனைவி இருவரும் கர்நாடகாவில் விஜயநகர மாவட்டத்தில் உள்ள இங்கலாகி என்கிற கிராமத்தில் உள்ள அன்னபூர்னேஸ்வரி வித்யபீதா ரெசிடென்சி பள்ளியை தத்தெடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான வேதா என்கிற திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சிவராஜ்குமார் கலந்துகொண்ட போது அடிப்படை வசதிகளற்ற இந்த பள்ளியின் அவல நிலை அவரது கவனத்திற்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் சிவராஜ் குமாரின் மனைவி இந்த பள்ளிக்கு நேரில் வருகை தந்து, பள்ளியின் தற்போதைய நிலைமை குறித்து அறிந்தார். இதைத்தொடர்ந்து பள்ளியை சீரமைக்கவும் மற்றும் இன்னும் மாணவர்களுக்காக கட்டமைப்புகளை மேம்படுத்தவும் பள்ளி நிர்வாகத்திடம் மிகப்பெரிய தொகையையும் வழங்கி உள்ளார். அதுமட்டுமல்ல நடிகர் சிவராஜ்குமார் இதுகுறித்து கூறும்போது மைசூரில் உள்ள சக்தி தாமா என்கிற பள்ளியின் தரத்திற்கு இந்த பள்ளியை கொண்டுவர வேண்டும் என திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.