சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
நடிகர் சிவராஜ்குமார் மற்றும் அவரது மனைவி இருவரும் கர்நாடகாவில் விஜயநகர மாவட்டத்தில் உள்ள இங்கலாகி என்கிற கிராமத்தில் உள்ள அன்னபூர்னேஸ்வரி வித்யபீதா ரெசிடென்சி பள்ளியை தத்தெடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான வேதா என்கிற திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சிவராஜ்குமார் கலந்துகொண்ட போது அடிப்படை வசதிகளற்ற இந்த பள்ளியின் அவல நிலை அவரது கவனத்திற்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் சிவராஜ் குமாரின் மனைவி இந்த பள்ளிக்கு நேரில் வருகை தந்து, பள்ளியின் தற்போதைய நிலைமை குறித்து அறிந்தார். இதைத்தொடர்ந்து பள்ளியை சீரமைக்கவும் மற்றும் இன்னும் மாணவர்களுக்காக கட்டமைப்புகளை மேம்படுத்தவும் பள்ளி நிர்வாகத்திடம் மிகப்பெரிய தொகையையும் வழங்கி உள்ளார். அதுமட்டுமல்ல நடிகர் சிவராஜ்குமார் இதுகுறித்து கூறும்போது மைசூரில் உள்ள சக்தி தாமா என்கிற பள்ளியின் தரத்திற்கு இந்த பள்ளியை கொண்டுவர வேண்டும் என திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.