மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' |

மலையாள திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஜெயராஜ். தமிழில் பரத் நடித்த போர் ஸ்டுடென்ட்ஸ் படத்தை இயக்கியதுடன் அதில் நடிகர் நரேனை அறிமுகப்படுத்தியதும் இவர் தான். கடந்த வருடம் இவர் மலையாளத்தில் இயக்கிய 19 ஆம் நூற்றாண்டு திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது சுரேஷ்கோபி நடித்து வரும் ஒரு பெரும களியாட்டம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஜெயராஜ்.
கடந்த 1997ல் ஜெயராஜ் இயக்கத்தில் களியாட்டம் என்கிற படத்தில் நடித்திருந்தார் சுரேஷ்கோபி. இந்த படத்திற்காக சுரேஷ்கோபிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. அதன்பிறகு 2006ல் இவர்கள் கூட்டணி அஸ்வரூதன் என்கிற படத்திற்காக இணைந்தது தற்போது 17 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் மீண்டும் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த படம் களியாட்டத்திற்கும் இந்த படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் என இயக்குனர் கூறினாலும் அதன் இரண்டாம் பாகமாக தான் இந்த படம் உருவாகிறது என திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.




