‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

மலையாள திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஜெயராஜ். தமிழில் பரத் நடித்த போர் ஸ்டுடென்ட்ஸ் படத்தை இயக்கியதுடன் அதில் நடிகர் நரேனை அறிமுகப்படுத்தியதும் இவர் தான். கடந்த வருடம் இவர் மலையாளத்தில் இயக்கிய 19 ஆம் நூற்றாண்டு திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது சுரேஷ்கோபி நடித்து வரும் ஒரு பெரும களியாட்டம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஜெயராஜ்.
கடந்த 1997ல் ஜெயராஜ் இயக்கத்தில் களியாட்டம் என்கிற படத்தில் நடித்திருந்தார் சுரேஷ்கோபி. இந்த படத்திற்காக சுரேஷ்கோபிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. அதன்பிறகு 2006ல் இவர்கள் கூட்டணி அஸ்வரூதன் என்கிற படத்திற்காக இணைந்தது தற்போது 17 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் மீண்டும் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த படம் களியாட்டத்திற்கும் இந்த படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் என இயக்குனர் கூறினாலும் அதன் இரண்டாம் பாகமாக தான் இந்த படம் உருவாகிறது என திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.