ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தெலுங்கு திரையுலகின் நட்சத்திர நடிகரான சிரஞ்சீவியின் சகோதரர்களில் ஒருவர்தான் நடிகர் நாகபாபு. இவரது மகள் நிஹாரிகா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த 2020 டிசம்பர் மாதம் இவருக்கும் ஐதராபாத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வரும் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் சில நாட்களாகவே நிஹாரிகாவும் அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர் என்கிற தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிஹாரிகாவும், சைதன்யாவும் தங்களது சோசியல் மீடியா கணக்கை ஒருவருக்கு ஒருவர் அன் பாலோ செய்துள்ளனர்.
அதேசமயம் நிஹாரிக தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா கணக்கில் அப்படியே விட்டு வைத்திருக்க, அவரது கணவரோ தாங்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இதையெல்லாம் வைத்து தான், தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் என்கிற செய்தி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.