'காந்தாரா' கதாநாயகியை 'அன்பாலோ' செய்த ரிஷப் ஷெட்டி | ஜூலை மாதத்திற்குத் தள்ளிப் போன 'ஜனநாயகன்' ரிலீஸ்? | சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கியாரா அத்வானி | ராம் சரணின் 41வது பிறந்தநாளில் 10 லட்சம் நன்கொடை வழங்கிய சிரஞ்சீவி | அஜித் உடன் நடித்தது மறக்க முடியாத தருணம் என்கிறார் ரெஜினா | நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் |

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நாக சைதன்யா. சில மாதங்களுக்கு முன் இவர் நடித்த ‛தண்டேல்' படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது தனது 24 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தேவ் கட்டா இயக்கும் மாயசபா என்ற அரசியல் கலந்த வெப்சீரிஸில் நாக சைதன்யா நடிப்பதாக சில தினங்களாக செய்தி வெளியாகி வருகிறது. ஆனால் இந்த தகவலில் உண்மையில்லை, இந்த படத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நாக சைதன்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாக சைதன்யா தற்போது கார்த்திக் வர்மா இயக்கத்தில் தனது 24வது படத்தில் நடிக்கிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் மர்மங்கள் கலந்த சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக உருவாகிறது. இதை பி.வி.எஸ்.என். பிரசாத் சுகுமார் உடன் இணைந்து தயாரிக்கிறார்.
சமீபத்தில் இந்த படம் பற்றிய முன்னோட்ட வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.