கராத்தே பாபு படத்தின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனர் பாக்யராஜ்க்கு டாக்டர் பட்டம் | தனுஷ் 55வது படம் பூஜையுடன் துவக்கம் : ஷங்கர், எஸ்ஜே சூர்யா பங்கேற்பு | மீண்டும் அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் ராஷ்மிகா மந்தனா | ரவீனா ரவிக்கு இன்ஸ்டாகிராமில் தொல்லை கொடுத்த மர்ம ஆசாமிகள் | டூப் போடாமல் சண்டைக்காட்சியில் நடிக்கும் சம்யுக்தா | குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன் | சித்தப்பாவுக்காக வழி விட்டு ஒதுங்கினாரா ராம்சரண்? | ஆக்சன் காட்சிகளை படமாக்க பிப்ரவரியில் ஜோர்டனுக்கு பறக்கும் டிராகன் குழு | ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் மூன்று இளம் பெண்கள் தற்கொலை ; சோனு சூட் வருத்தம் கலந்த எச்சரிக்கை |

தெலுங்கு திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்த்தது போல ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் விழா மேடை ஏறி பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் கீரவாணி முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார். அப்போது அவர் பேசும்போது நான் கார்பென்டர்ஸ் கேட்டு வளர்ந்தவன் என்று கூறினார்.
அவர் குறிப்பிட்ட கார்பென்டர்ஸ் என்பது ஹாலிவுட்டில் எண்பதுகள் வரை பாப் மியூசிக்கில் கொடிகட்டி பறந்த அமெரிக்காவை சேர்ந்த இரட்டை சகோதர இசையமைப்பாளர்களான கார்பென்டர்ஸ் குறித்து. ஆனால் இந்த வார்த்தை பெரும்பாலான மீடியாக்களில் தச்சு வேலை செய்பவர்கள் என புரிந்து கொள்ளப்பட்டு, கீரவாணி மரக்கட்டைகளில் தச்சு வேலை செய்யும்போது ஏற்படும் சத்தத்தை கேட்டு வளர்ந்தார் என்கிற அர்த்தத்துடன் செய்திகள் வெளியாகின. இதை ரசிகர்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்..




