‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
தெலுங்கு திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்த்தது போல ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் விழா மேடை ஏறி பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் கீரவாணி முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார். அப்போது அவர் பேசும்போது நான் கார்பென்டர்ஸ் கேட்டு வளர்ந்தவன் என்று கூறினார்.
அவர் குறிப்பிட்ட கார்பென்டர்ஸ் என்பது ஹாலிவுட்டில் எண்பதுகள் வரை பாப் மியூசிக்கில் கொடிகட்டி பறந்த அமெரிக்காவை சேர்ந்த இரட்டை சகோதர இசையமைப்பாளர்களான கார்பென்டர்ஸ் குறித்து. ஆனால் இந்த வார்த்தை பெரும்பாலான மீடியாக்களில் தச்சு வேலை செய்பவர்கள் என புரிந்து கொள்ளப்பட்டு, கீரவாணி மரக்கட்டைகளில் தச்சு வேலை செய்யும்போது ஏற்படும் சத்தத்தை கேட்டு வளர்ந்தார் என்கிற அர்த்தத்துடன் செய்திகள் வெளியாகின. இதை ரசிகர்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்..