15 வயதில் என் போட்டோவை மார்பிங் செய்தனர் : ஜான்வி கபூர் வேதனை | சுந்தர்.சிக்கு ஆதரவாக விஷால்... எதிராக வடிவேலு? | டிரைலருக்கு தனி எடிட்டர் தேவையா? கேள்வி எழுப்பும் தயாரிப்பாளர் | 'யூத் 2' உருவாகுமா? கென் கையில் முடிவு | ஏப்ரல் 10ல் ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி | அடுத்த வாரிசு நடிகை… பிரியங்கா ராஜகுமாரன் | டாக்டர் ராஜசேகருக்கு 'கம்பேக்' கொடுத்த 'பைக்கர்' | மழையால் 'எல்ஐகே' விழா தள்ளி வைப்பு | விஜய் சுட்ட 13வது ஆள் நான் தான் : விக்னேஷ் சிவன் | ‛ரஞ்ஜன்' ஆன ‛கோர்ட்' : அப்பா தியாகராஜன் இயக்கத்தில் மகன் பிரசாந்த் நடிக்கிறார் |

தெலுங்கு திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்த்தது போல ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் விழா மேடை ஏறி பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் கீரவாணி முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார். அப்போது அவர் பேசும்போது நான் கார்பென்டர்ஸ் கேட்டு வளர்ந்தவன் என்று கூறினார்.
அவர் குறிப்பிட்ட கார்பென்டர்ஸ் என்பது ஹாலிவுட்டில் எண்பதுகள் வரை பாப் மியூசிக்கில் கொடிகட்டி பறந்த அமெரிக்காவை சேர்ந்த இரட்டை சகோதர இசையமைப்பாளர்களான கார்பென்டர்ஸ் குறித்து. ஆனால் இந்த வார்த்தை பெரும்பாலான மீடியாக்களில் தச்சு வேலை செய்பவர்கள் என புரிந்து கொள்ளப்பட்டு, கீரவாணி மரக்கட்டைகளில் தச்சு வேலை செய்யும்போது ஏற்படும் சத்தத்தை கேட்டு வளர்ந்தார் என்கிற அர்த்தத்துடன் செய்திகள் வெளியாகின. இதை ரசிகர்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்..