அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தேசிய விருது பெற்ற அன்னயும் ரசூலும், கம்மட்டி பாடம் ஆகிய படங்களை இயக்கியவர் மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி. இவரது மனைவி நடிகை கீது மோகன்தாஸும் இயக்குனர் தான். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிவின்பாலி நடிப்பில் துறமுகம் என்கிற படத்தை இயக்க ஆரம்பித்தார் ராஜீவ் ரவி. சில பிரச்சினைகள் காரணமாக அந்த படம் பாதியில் நிற்க, தனது மனைவி நிவின்பாலியை வைத்து இயக்கிய மூத்தோன் என்கிற படத்திற்கு ஒளிப்பதிவாளராக வேலை செய்ய போய்விட்டார் ராஜீவ் ரவி. அந்த படமும் ரிலீஸ் ஆகி மூன்று வருடங்களுக்கு மேல் ஓடி விட்டது.
இந்த நிலையில் ஒரு வழியாக தற்போது துறமுகம் படம் இன்று(மார்ச் 10) வெளியாகி இருக்கிறது. இந்த படம் இவ்வளவு தாமதமானதற்கு காரணம் படத்தின் தயாரிப்பாளர் சுகுமார் தெக்கேபாட் தான் என வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார் நடிகர் நிவின்பாலி. பொதுவாக தான் நடிக்கும் படங்கள் குறித்து எங்கேயும் விமர்சித்தோ எதிர்மறையாகவோ பேச விரும்பாதவர் நிவின்பாலி. அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படி மனம் நொந்துபோய் கூறியுள்ளார்.
இந்த படம் தாமதமானது குறித்து பேசும்போது, “படம் துவங்கிய சமயத்தில் பிரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே 70 சதவீத லாபத்தை சம்பாதித்து விட்டது. லாபத்தின் மீது மட்டுமே குறிக்கோள் இல்லாத ஒரு நல்ல தயாரிப்பாளராக இருந்திருந்தால் படம் எப்போதோ முடிந்து எளிதாக வெளியாகி இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மீண்டும் எப்போது இந்த படம் துவங்கப்படும் என தெரியாமல் இருந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான லிஸ்டின் ஸ்டீபன் இந்த படத்திற்கு பொருளாதார உதவி செய்து தற்போது ரிலீஸ் வரை கொண்டு வந்துள்ளதற்காக அவருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார் நிவின்பாலி.