இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தேசிய விருது பெற்ற அன்னயும் ரசூலும், கம்மட்டி பாடம் ஆகிய படங்களை இயக்கியவர் மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி. இவரது மனைவி நடிகை கீது மோகன்தாஸும் இயக்குனர் தான். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிவின்பாலி நடிப்பில் துறமுகம் என்கிற படத்தை இயக்க ஆரம்பித்தார் ராஜீவ் ரவி. சில பிரச்சினைகள் காரணமாக அந்த படம் பாதியில் நிற்க, தனது மனைவி நிவின்பாலியை வைத்து இயக்கிய மூத்தோன் என்கிற படத்திற்கு ஒளிப்பதிவாளராக வேலை செய்ய போய்விட்டார் ராஜீவ் ரவி. அந்த படமும் ரிலீஸ் ஆகி மூன்று வருடங்களுக்கு மேல் ஓடி விட்டது.
இந்த நிலையில் ஒரு வழியாக தற்போது துறமுகம் படம் இன்று(மார்ச் 10) வெளியாகி இருக்கிறது. இந்த படம் இவ்வளவு தாமதமானதற்கு காரணம் படத்தின் தயாரிப்பாளர் சுகுமார் தெக்கேபாட் தான் என வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார் நடிகர் நிவின்பாலி. பொதுவாக தான் நடிக்கும் படங்கள் குறித்து எங்கேயும் விமர்சித்தோ எதிர்மறையாகவோ பேச விரும்பாதவர் நிவின்பாலி. அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படி மனம் நொந்துபோய் கூறியுள்ளார்.
இந்த படம் தாமதமானது குறித்து பேசும்போது, “படம் துவங்கிய சமயத்தில் பிரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே 70 சதவீத லாபத்தை சம்பாதித்து விட்டது. லாபத்தின் மீது மட்டுமே குறிக்கோள் இல்லாத ஒரு நல்ல தயாரிப்பாளராக இருந்திருந்தால் படம் எப்போதோ முடிந்து எளிதாக வெளியாகி இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மீண்டும் எப்போது இந்த படம் துவங்கப்படும் என தெரியாமல் இருந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான லிஸ்டின் ஸ்டீபன் இந்த படத்திற்கு பொருளாதார உதவி செய்து தற்போது ரிலீஸ் வரை கொண்டு வந்துள்ளதற்காக அவருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார் நிவின்பாலி.