மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் வில்லன்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் கபீர் துஹான் சிங். அந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் றெக்க மற்றும் விஷாலின் ஆக்சன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். அதேசமயம் அதிக அளவிலான தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவில் நுழைந்த இந்த எட்டு ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துவிட்ட கபீர் துஹான் சிங் தற்போது முதன்முறையாக மலையாளத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
நடிகர் டொவினோ தாமஸ் மூன்று வேடங்களில் தற்போது நடித்து வரும் வரலாற்று படமான அஜயன்டே ரெண்டாம் மோஷனம் என்கிற படத்தில் வில்லனாக நடிக்கிறார் கபீர் துஹான் சிங்.. மூன்று விதமான காலகட்டங்களில் நடக்கும் இந்த படத்தில் இவரும் இரண்டு வித காலகட்டங்களில் இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ளாராம்.
மேலும் இந்தப்படத்தில் டொவினோ தாஸுடன் வாள் சண்டை காட்சிகளிலும் முதன்முறையாக நடித்தது புதுமையான அனுபவமாக இருந்தது என கூறியுள்ளா கபீர் துஹான் சிங். மலையாள திரையுலகில் நுழைவதற்கான சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தபோது தனது நடிப்புக்கு தீனி போடும் விதமாக இந்த படமும் கதாபாத்திரமும் அமைந்ததில் இரட்டிப்பு சந்தோஷம் என்றும் கூறியுள்ளார்.