ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள திரையுலகில் சின்னச்சின்ன படங்கள் மூலம், அதே சமயம் வித்தியாசமான கதைக்களத்தில் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் லியோ ஜோஸ் பெள்ளிசேரி. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மம்முட்டியை வைத்து இவர் இயக்கிய நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற எதார்த்த கிராமத்து படம் வெளியானது. தற்போது அதற்கு முற்றிலும் நேர்மாறாக மோகன்லாலை வைத்து மிகப்பெரிய ஆக்சன் படமாக உருவாகி வரும் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தை இயக்கி வருகிறார் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஜெய்சல்மர் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது அணுகுண்டு சோதனை மூலம் புகழ்பெற்ற பொக்ரான் பகுதியில் மிகப்பெரிய கோட்டை செட் ஒன்று அமைக்கப்பட்டு அங்கே பல மொழிகளில் இருந்தும் வரவழைக்கப்பட்ட கிட்டத்தட்ட 300 சண்டைக்கலைஞர்கள் மற்றும் மோகன்லால் ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. மல்யுத்தம் குறித்து இந்த படம் உருவாவதால் தற்போது பிரம்மாண்ட மல்யுத்த போட்டி தொடர்பான காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருகின்றன என்றும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் புலி முருகன் படத்திற்கு பிறகு மீண்டும் மோகன்லாலின் மாஸ் சண்டை காட்சிகளை இந்த படத்தில் பார்க்கலாம் என்கிறார்கள்.