ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரித்விராஜ் கடந்த சில வருடங்களில் ஒரு வெற்றிகரமான கமர்சியல் இயக்குனராகவும் தன்னை உருமாற்றிக் கொண்டார். அது மட்டுமல்ல இந்தியில் தற்போது படே மியான் சோட்டே மியான் என்கிற படத்திலும் தெலுங்கில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்திலும் வில்லனாகவும் நடித்து வருகிறார். இதற்கு அடுத்ததாக மோகன்லாலை வைத்து தான் இயக்கிய வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தையும் இயக்க உள்ளார்.
இந்த நிலையில் முதன்முறையாக டிஜிட்டல் தளத்தில் அடியெடுத்து வைத்துள்ள பிரித்விராஜ் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். இந்த வெப்சீரிஸை தயாரிக்கும் சரிகம இந்திய நிறுவனத்தின் துணைத்தலைவரான சித்தார்த் ஆனந்த் குமார் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
பிஸ்கட் கிங் ராஜன் பிள்ளை என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் உருவாக இருப்பதாகவும் இதனை பிரித்விராஜே இயக்கவும் செய்கிறார் என்றும் ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அதேசமயம் தற்போது இந்த வெப்சீரிஸ் குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் பிரித்விராஜ் இதை இயக்குகிறாரா என்பது பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை.