பதிரனாவுடன் காதலா? விளக்கமளித்த பாக்கியலெட்சுமி நடிகை | யாஷிகாவுடன் காதலா? - வெறும் புரொமோஷன் தாங்க என்கிறார் ரிச்சர்ட் ரிஷி | பொய் புகார் : பிரான்ஸ் பெண் மீது அறம் இயக்குனர் புகார் | போதையில் நடிகர் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு | காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் | நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா | சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன் | நேஹா சக்சேனாவும் பரபரப்பு வளையத்தில் சிக்குவாரா? | இறுதிக்கட்டத்தை எட்டிய அர்ஜுன் - நிக்கி கல்ராணியின் மலையாள படம் | 35 வருடங்களுக்குப் பிறகு வைரலான மோகன்லால் - மம்முட்டி தம்பதி |
தெலுங்குத் திரையுலகத்தில் இதற்கு முன்பு ஒரே நிறுவனம் தயாரித்த இரண்டு படங்கள் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்ததில்லை. அந்த சாதனையை மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் இந்த பொங்கலுக்கு படைத்தது. அந்நிறுவனத்தின் தயாரிப்பில் பாலகிருஷ்ணா நடித்த 'வீரசிம்ஹா ரெட்டி' படம் ஜனவரி 12ம் தேதியும், சிரஞ்சீவி நடித்த 'வால்டர் வீரய்யா' படம் ஜனவரி 13ம் தேதியும் உலகம் முழுவதும் வெளியானது.
இரண்டு படங்களுமே 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 'வால்டர் வீரய்யா' படம் 108 கோடி வசூலையும், 'வீரசிம்ஹா ரெட்டி' படம் 104 கோடி வசூலையும் பெற்றதாக நேற்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இரண்டு படங்களுமே தெலுங்கு மாநிலங்களில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும், அமெரிக்காவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தில் இந்த வருட ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பமாகியுள்ளதாக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.