நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! |
தெலுங்குத் திரையுலகத்தில் இதற்கு முன்பு ஒரே நிறுவனம் தயாரித்த இரண்டு படங்கள் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்ததில்லை. அந்த சாதனையை மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் இந்த பொங்கலுக்கு படைத்தது. அந்நிறுவனத்தின் தயாரிப்பில் பாலகிருஷ்ணா நடித்த 'வீரசிம்ஹா ரெட்டி' படம் ஜனவரி 12ம் தேதியும், சிரஞ்சீவி நடித்த 'வால்டர் வீரய்யா' படம் ஜனவரி 13ம் தேதியும் உலகம் முழுவதும் வெளியானது.
இரண்டு படங்களுமே 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 'வால்டர் வீரய்யா' படம் 108 கோடி வசூலையும், 'வீரசிம்ஹா ரெட்டி' படம் 104 கோடி வசூலையும் பெற்றதாக நேற்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இரண்டு படங்களுமே தெலுங்கு மாநிலங்களில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும், அமெரிக்காவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தில் இந்த வருட ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பமாகியுள்ளதாக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.