2ம் பாக ஜுரம் தான் மலைக்கோட்டை வாலிபன் தோல்விக்கு காரணம் : தயாரிப்பாளர் சொன்ன புது தகவல் | எதிர்த்துப் போட்டியிட்ட வில்லன் நடிகரையும் உதவிக்கு இணைத்துக் கொண்ட ஸ்வேதா மேனன் | ஹாட்ரிக் வெற்றியால் படு பிஸியான பிரதீப் ரங்கநாதன் | அந்த ஹீரோவின் கால்ஷீட் கிடைக்காததால் தான் வாத்தி படத்தில் தனுஷ் நடித்தார் : வெங்கி அட்லூரி | லோகா படம் நேரடியாக தெலுங்கில் உருவாகி இருந்தால் வெற்றி பெற்றிருக்காது : தயாரிப்பளர் நாகவம்சி | 'ஆர்யன்' படத்தில் அமீர்கான் நடிக்காதது ஏன்? விஷ்ணுவிஷால் சொன்ன புது தகவல் | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'முத்து, குருதிப்புனல்' | தீபிகா படுகோனே கூட 'டான்ஸ்' ஆடவும் ரெடி: சரத்குமார் | இந்த வாரம்... ரிலீஸ் இல்லாத வாரம் ? | ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் |
தமிழில் விஷால் நடித்த ஆக்சன் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஐஸ்வர்ய லட்சுமி. அதன்பிறகு தனுஷுடன் ஜகமே தந்திரம் என்கிற படத்தில் நடித்தார். இருந்தாலும் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் சமுத்திர குமாரியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ஐஸ்வர்ய லட்சுமி.
தற்போது வெளியாகி உள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த படம் முழுவதும் இவரது கதாபாத்திரத்தை மையப்படுத்தியே உருவாகியுள்ளது.
இது ஒரு பக்கமிருக்க மலையாளத்திளும் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்ய லட்சுமி. அதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக கிங் ஆப் கோத என்கிற படத்தில் நடித்து வரும் இவர், இன்னொருபக்கம் பி உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மம்முட்டி நடித்து வரும் கிறிஸ்டோபர் படத்திலும் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.
தான் சிறுவயதிலிருந்தே மம்முட்டி ரசிகை என கூறி வரும் ஐஸ்வர்ய லட்சுமி, அவருடன் நடிக்கும் கனவு நிறைவேறியது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அதேசமயத்தில் அவரது மகன் துல்கர் சல்மான் படத்திலும் ஒரே சமயத்தில் நடித்து வருவது எதிர்பாராத ஒன்று என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.