தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
நேரம், பிரேமம் போன்ற படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். தற்போது மலையாளத்தில் இவர் இயக்கி உள்ள படம் கோல்டு. இந்த படத்தில் பிருத்விராஜ் - நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன இந்தபடம் இப்போது டிசம்பர் ஒன்றாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோல்டு படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் அளித்திருப்பதாகவும், படத்தின் ரன்னிங் டைம் 165 நிமிடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிருத்விராஜிற்கு இணையாக நயன்தாராவும் முக்கிய ரோலில் நடித்திருப்பதால் இந்த படம் கேரளாவைப் போன்று தமிழ்நாட்டிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாக உள்ளது.