குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? | இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி |

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் நடித்திருந்த சட்டம்பி என்கிற திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு யு-டியூப் சேனலின் ஸ்டுடியோவிற்கு நேர்காணலுக்கு சென்ற இவர், தன்னை பேட்டி எடுத்த தொகுப்பாளினியை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டிய நிகழ்வு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்கும் பதியப்பட்டது. இவரது இந்த செயல் காரணமாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்த புகாரை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிப்பதற்கு தற்காலிக தடையும் விதிக்கப்பட்டது.
ஆனால் சில நாட்களில் சம்பந்தப்பட்ட அந்த தொகுப்பாளினி அந்த நடிகரின் திரையுலக வாழ்க்கை தன்னால் பாதிக்கப்பட வேண்டாம் என்று கருதியதாலும் ஸ்ரீநாத் பாஷி அந்த பெண் தொகுப்பாளினியிடம் தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டதாலும் அவர் மீது கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார். இருந்தாலும் அவர் மீதான தடை தற்போதுவரை நீடித்து வந்தது.
இந்த நிலையில் அவர் நடித்துள்ள படம் 'படச்சோனே இங்களு காத்தொலு' என்கிற படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்ரீநாத் பாஷிக்கு புதிய பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்துள்ளன. அதேசமயம் அவர் மீது நீடிக்கும் தடையால் அந்த வாய்ப்புகளை அவர் ஒப்புக் கொள்ள முடியாத சூழல் இருந்தது. இதைத்தொடர்ந்து அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் மீதான தற்காலிக தடையை மலையாள தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.