அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
மலையாள திரையுலகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி என்பவர் யு-டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது தொகுப்பாளியிடம் அநாகரிக வார்த்தைகளை பேசியதாக அவர்மீது புகார் பதிவு செய்யப்பட்டது. காவல்துறை அவரை கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தது. இவரது செயலுக்காக மலையாள தயாரிப்பாளர் சங்கம் இவருக்கு புதிய படங்களில் நடிக்க தற்காலிக தடை விதித்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த நடவடிக்கையை மலையாள திரையுலகை சேர்ந்த சினிமா பெண்கள் நல அமைப்பு வரவேற்றுள்ளது.
அதேசமயம் இதற்கு முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிவின்பாலி நடித்து வரும் படவேடு இயக்குனரான லிஜு கிருஷ்ணா என்பவர் அந்த படத்தில் நடித்த துணை நடிகை ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி அதனால் போலீசிலும் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். அதேபோல தயாரிப்பாளரும், நடிகருமான விஜய்பாபு தனது படத்தில் பணியாற்றிய துணை நடிகை ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்ததை தொடர்ந்து, அந்த பெண்ணின் அடையாளத்தை சோசியல் மீடியா மூலமாக வெளிப்படுத்தும் இன்னொரு தவறையும் செய்தார். இந்த வழக்கில் அவர் தேடப்பட்டபோது வெளிநாட்டிற்கு சென்று தலைமறைவாக இருந்தார். பின் கேரளா திரும்பி கைதாகி ஜாமினில் வெளிவந்தார்.
ஆனால் லிஜூகிருஷ்ணா மற்றும் விஜய்பாபு இவர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் இப்படி ஒரு தடையை ஏன் விதிக்கவில்லை. ஸ்ரீநாத் பாஷி எந்த பின்புலமும் இல்லாதவர் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதா.? அவருக்கு தடை விதித்தது போன்று மற்ற இருவர் மீதும் உடனடியாக படங்களின் நடிக்க படங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சினிமா பெண்கள் நல அமைப்பினர் வைத்துள்ளனர்.